/* */

மத்திய அமைச்சரை வரவேற்று சாலையின் நடுவே ஆபத்தான நிலையில் பேனர்

மத்திய அமைச்சரை வரவேற்று சாலையின் நடுவே ஆபத்தான நிலையில் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மத்திய அமைச்சரை வரவேற்று சாலையின் நடுவே ஆபத்தான நிலையில் பேனர்
X

சாலையின் வைக்கப்பட்ட பேனர் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருந்தது.

சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் கட்டடம் திறக்கப்பட்டு ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவாலால் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய அமைச்சரை வரவேற்க தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையின் நடுவே முறையான அனுமதியின்றி ஆபத்தான முறையில் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில பேனர்கள் தொங்கிக் கொண்டு மோசமான நிலையில் இருந்தது.

இதனை கண்டு கொள்ளாமல் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2019ம் ஆண்டு செம்டம்பர் 12ம் தேதி இதே போன்ற சாலையின் நடுவே அமைக்கப்பட்ட வரவேற்பு பேனரால் தான் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். அப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இனி பேனர் வைக்கமாட்டோம் என உறுதியளித்திருந்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் அதனை காற்றில் பறக்க விடும் விதமாக மேயர் கலந்து கொண்ட நிகழ்விலேயே பேனர் வைத்திருந்தது சமூக ஆர்வலர்கள் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக முனுமுனுத்தனர்.

Updated On: 14 Aug 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!