/* */

சென்னையில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 6 பேர் கைது

சென்னையில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 298 மது பாட்டில்கள், 139 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 6 பேர் கைது
X

தாம்பரம் பகுதியில் கள்ளச்சந்தையில் விற்ற முயன்ற மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், இன்று திடீரென சோதனை நடந்தது. அதில், தாம்பரம் காவல் நிலைய பகுதியில், கள்ளச்சந்தையில், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காமராஜ்(32), என்பவர் கைது செய்யப்பட்டார். அதேபோல், அனகாபுத்தூர் அணுகு சாலையில், போலீசார் ஆய்வு செய்ததில், 186 மது பாட்டில்கள், 7 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பூமிநாதன்(32), என்பவர் கைது செய்யப்பட்டார். சேலையூர் காவல் நிலையத்திற்குட்பட்ட, வேங்கைவாசலில் நடந்த ஆய்வில், 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ராஜா என்பவர், கைது செய்யப்பட்டார்.

மணிமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட, ஜவஹர்லால் நகரில், நடந்த ஆய்வில், 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சசிகுமார்(38), என்பவர் கைது செய்யப்பட்டார். குன்றத்தூர் நடந்த ஆய்வில், 132 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கலியபெருமாள்(42), பாஸ்கர்(35), ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் கமிஷ்னர் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஈடுபட்ட திடீர் ரெய்டில் மொத்தமாக 298 மது பாட்டில்கள், 139 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் ஈடுபட்ட மது விலக்க அமலாக்க பிரிவு ஆய்வாளர்கள் சரவணன், ஷாலினி உள்ளிட்ட காவல் குழுவினரை தாம்பரம் கமிஷனர் ரவி பாராட்டினார்.

Updated On: 10 March 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  2. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  3. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  4. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  5. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  6. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  7. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  8. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  9. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு