/* */

தாம்பரம்-செங்கல்பட்டு 3வது தடத்தில் முதலாவது மின்சார ரயில் இயக்கம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது வழித்தடத்தில் முதலாவது மின்சார ரயில் இயக்கம் தொடங்கியது.

HIGHLIGHTS

தாம்பரம்-செங்கல்பட்டு 3வது தடத்தில் முதலாவது மின்சார ரயில் இயக்கம்
X

சென்னை கடற்கரை-தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை, செங்கல்பட்டு வரை இயக்கும் வகையில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் ரூ.256 கோடி செலவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 3 கட்டமாக நடைபெற்று வந்தது. முதற்கட்டமாக கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் இடையே 11.07 கி.மீ தொலைவுக்கும், 2-வது கட்டமாக கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே 8.36 கி.மீ தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி நடந்தது.

இந்தநிலையில், இறுதி கட்டமாக கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே 3-வது புதிய பாதை பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து ரயில்வே அதிகாரிகள் சோதனை ஓட்டத்தையும் நடத்தி முடித்தனர். இந்தநிலையில், நேற்று சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மாலை இயக்கப்பட்ட மின்சார ரயிலை, தாம்பரத்தில் இருந்து 3-வது வழித்தடத்தில் முதன் முறையாக அதிகாரிகள் இயக்கினர். இன்னும் ஓரிரு நாளில் 3-வது வழிப்பாதை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிகிறது.

Updated On: 2 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்