/* */

ஏரியில் மிதந்து வந்த 2 அடி முதலைக்குட்டி: பீதியடைந்த பொதுமக்கள்

தாம்பரம் அருகே, ஏரியில் இருந்து வந்த 2 அடி முதலை குட்டியை பிடித்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

HIGHLIGHTS

ஏரியில் மிதந்து வந்த 2 அடி முதலைக்குட்டி: பீதியடைந்த பொதுமக்கள்
X

ஏரியில் மிதந்து வந்த முதலைக்குட்டி.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே பெருங்களத்தூா், சதானந்தபுரம் எம்ஜிஆர் நகர் ஏரியில், 10 க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ஏரிக்கரையோரம், இரண்டு அடி நீளம் கொண்ட முதலை குட்டி ஒன்று தண்ணீா் கரையோரம் ஒதுங்கி இருந்தது.

ஏரியில் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவா்கள் சிலா் இதை பாா்த்து, ஊா் மக்களிடம் கூறினர். தகவலின் பேரில் போலீஸ், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். இதனிடையே, மக்கள் நடமாட்டம் இருந்ததால், முதலை மீண்டும் தண்ணீருக்குள் செல்ல முயன்றது. அதற்குள், கனமான நைலான் கயிற்றால் கட்டி இழுத்து, முதலைக்குட்டியை வெளியே கொண்டு வந்து, பாதுகாப்பாக அங்கு தனியாக வைத்தனர்.

அப்பகுதியினர் கூறுகையில், இந்த ஏரியில் 8அடி முதல் 10 அடி நீளம் கொண்ட 10 க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வசித்து வருபவர்கள் தினமும் பதற்றத்துடன் இருந்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள், உடனடியாக முதலைகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 25 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!