/* */

தாம்பரம்: பள்ளி மாணவிக்கு காதல் வலைவீசி கர்ப்பமாக்கிய வாலிபர்..! -போக்சோவில் கைது

தாம்பரம்: பள்ளி மாணவிக்கு  காதல் வலைவீசி கர்ப்பமாக்கிய வாலிபர்..!  -போக்சோவில்  கைது
X

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பழைய பெருங்களத்தூரை சேர்ந்த +2 படிக்கும் மாணவி ஒருவா் கடந்த கொரோனா காலங்களில் அப்பகுதியில் உள்ள டிப்பாா்ட்மெண்டல் ஸ்டோரில் பகுதிநேர வேலை செய்து வந்துள்ளார். அந்த மாணவி வேலை செய்யும் கடைக்கு படப்பை அடுத்த கரசங்கால் பகுதியிலிருந்து தனசேகர்(21) என்ற வாலிபர் அவ்வப்போது அந்த மளிகை கடைக்கு சாக்லேட் டெலிவரி செய்ய வரும்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி தனசேகர் அந்த இளம் பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கின்றேன் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி கடந்த டிசம்பர் மாதம் முதல் பழகி வந்துள்ளார்

இந்நிலையில் இளம் பெண்ணின் தாயார் கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்தி அன்று இரவு இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற தனசேகர் ஆசைவார்த்தை கூறி உடலுறவு வைத்துள்ளார். அதனை தொடர்ந்து பலமுறை கட்டாயப்படுத்தி பயமுறுத்தி உடலுறவில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக மகளுக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் அப்பொழுது பரிசோதனை செய்ததில் அந்த இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மகளிடம் விசாரித்தபோது கரசங்கால் பகுதியைச் சேர்ந்த தனசேகர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டதால் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது. இதைக் குறித்து அந்த வாலிபரிடம் சென்று கேட்டுள்ளனர்

அதனை ஒப்புக்கொண்ட வாலிபர் நான் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் ஆனால் எனக்கு 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் அது மட்டுமல்ல அந்தப் பெண்ணுக்கு டிஎன்ஏ (DNA) டெஸ்ட் எடுக்க வேண்டுமென மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தாய் மஞ்சுளா தனசேகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு தனசேகரை கைது செய்த விசாரணை செய்தனர் விசாரணையில் மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி பலமுறை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 Jun 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு