/* */

சேலையூர் காவல்நிலையத்தில் பணியின்போது உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

சேலையூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சேலையூர் காவல்நிலையத்தில் பணியின்போது உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்
X

சேலையூர் காவல்நிலையத்தில் பணியின்பாேது உயிரிழந்த உதவி ஆய்வாளர் ஹரிராமன்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிராமன் (57) இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவர்களுடைய மகன் பட்டதாரியான சோமகந்தன் (28). இவர் சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பணியினை முடித்துவிட்டு இன்று மதியம் இரண்டு மணி அளவில் மீண்டும் சேலையூர் காவல் நிலையத்திற்கு பணிக்கு வந்த ஹரிராமன் திடிரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக காவலர்கள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உதவி ஆய்வாளர் ஹரிராமன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பணியில் இருந்த உதவி ஆய்வாளர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பணியின் போது இறந்த உதவி ஆய்வாளரின் மகன் சோமகந்தனுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது