/* */

மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகளை கைப்பற்றினர்.

HIGHLIGHTS

மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
X

மேடவாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

.சென்னை, பள்ளிக்கரணை, காமகோட்டி நகரை சேர்ந்தவர் புனிதவதி(35), கடந்த மாதம் இவர் மேடவாக்கம், மாம்பாக்கம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த 4 1/2, சவரன் நகைகளை பறித்து சென்றனர்.
இது குறித்து அளித்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட விருதாச்சலம் தாலுக்கா சின்னக்காப்பான்குளத்தை சேர்ந்த சிவராமன்(40), கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூரை சேர்ந்த சகாயராஜ்(43), ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், புனிதவதியிடம் நகை பறித்ததும், மேடவாக்கத்தை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணிடம் ஐந்தரை சவரன் நகைகளை பறித்ததும் தெரியவந்தது.
இருவர் மீதும் பல குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த, 10 சவரன் நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 23 Dec 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்