/* */

மாணவிகள் கொடுத்த புகாரில் தனியார் கல்லூரி பேராசிரியர் கைது

மாணவிகள் கொடுத்த புகாரில் தனியார் கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு போலீசார் செய்து கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாணவிகள் கொடுத்த புகாரில் தனியார் கல்லூரி பேராசிரியர் கைது
X

மாணவிகள் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்

சென்னை பள்ளிகரணை அடுத்த ஜல்லடையான்பேட்டையில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆபிரகாம் அலெக்ஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு தொடுதல், ஆபாசமாக பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது, வாகனத்தில் கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது என பல்வேறு வழிகளில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பேராசிரியரின் பாலியல் தொல்லை எல்லை மீறி சென்று அறை எடுக்கலாமா, மது அருந்தலாமா என்று மாணவிகளிடம் பேசியுள்ளார். இதனால் மாணவிகள் சக கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக கடந்த 6ம் தேதி துறை தலைவர் பத்மநாபன் என்பவரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு முன்வைத்தும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டத்துல் ஈடுபட்டனர்.
உடனடியாக தகவலறிந்து வந்த பள்ளிகரணை போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது பின்னர் பேராசிரியர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

Updated On: 18 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  5. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  9. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  10. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி