/* */

மடிப்பாக்கத்தில் ஆஞ்சநேயர் சிலையை திருடிய நபர் கைது

மடிப்பாக்கத்தில் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை திருடிய நபர் கைது செய்யப்பட்டு வெண்கல சிலை பறிமுதல்.

HIGHLIGHTS

மடிப்பாக்கத்தில் ஆஞ்சநேயர் சிலையை திருடிய நபர் கைது
X

சிலை திருடியதாக கைதானவர் 

சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் உள்ள, ஆஞ்சநேயர் கோயிலில் 1½ அடி ஆஞ்சநேயர் சிலை கடந்த 2ம் தேதி கோவிலுக்கு சென்ற போது காணாமல் போனதாக கோயில் நிர்வாகி குருராஜன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆஞ்சநேயர் சிலையை திருடிய வேப்பூர் பகுதியை சேர்ந்த ராஜா(எ)ஐசக்(34), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து வெண்கல ஆஞ்சநேயர் சிலையை பறிமுதல் செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் சிலை திருட்டு வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய சுருட்டை முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!