/* */

தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை நூக்கம்பாளையம் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவர்களை தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
X

கொள்ளை முயற்சி. நடந்த தனியார் வங்கியின் ஏ.டி.எம் (HDFC) மையம்

பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி, நூக்கம் பாளையம் சாலையில், தனியார் வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில், அந்த ஏ.டி.எம்., இயந்திரத்தின் அலாரம் ஒலித்தது.அலாரம் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில், பெரும்பாக்கம் காவல்நிலைய, ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் வைக்கப்பட்டுள்ள பகுதியின் கதவை கொள்ளையர்கள் திறக்க முயற்சித்திருப்பதும், அலாரம் அடித்ததால் அவர்கள் தப்பி ஓடி இருப்பதும் தெரியவந்தது.கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக, அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 17 July 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...