/* */

பல்லாவரத்தில் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பல்லாவரத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பல்லாவரத்தில் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

பல்லாவரத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட அனகாப்புத்தூர் நகராட்சி அரசினர் மேநிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் அறிகுறிகள் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கின்ற வகையில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவா என்பதை கேட்டறிந்து உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவி ஆகியவைகள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது முகாம்கள் நடத்தப்படுகிறது அனகாப்புத்தூர் நகராட்சி அரசினர் மேநிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் கொரோனாத் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றி நடந்திட வேண்டும். என மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 July 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?