/* */

நடு ரோட்டில் எரிந்த டூவீலர் - பல்லாவரம் ஜிடிஎஸ் சாலையில் பரபரப்பு

பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

நடு ரோட்டில் எரிந்த டூவீலர் - பல்லாவரம் ஜிடிஎஸ் சாலையில் பரபரப்பு
X

சாலையில் எரிந்த டூவீலர்.

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த இறைச்சி வியாபாரி சித்திக், குரோம்பேட்டையில் உள்ள உணவு விடுதிக்கு நேற்று, இருசக்கர வாகனத்தில் இறைச்சி கொண்டுவந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென தீ உண்டானது.

மளமளவென்று தீ பற்றிக் கொண்டதால், சித்திக் உடனடியாக வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு இறைச்சி பையை எடுத்த கொண்டு கீழே இறங்கினார். இதற்குள், வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இது குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து போலீசர் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 12:00 AM GMT

Related News