/* */

பல்லாவரம் அருகே இளைஞரை கடத்திச் சென்ற தாக்கிய இருவர் கைது

பல்லாவரம் அருகே இளைஞரை கடத்திச் சென்று அடைத்து வைத்து தாக்கிய இருவர் கைது, தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பல்லாவரம் அருகே இளைஞரை கடத்திச் சென்ற  தாக்கிய இருவர் கைது
X

கடத்தி சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் யோகேஷ்வரன்(26), இவரது தந்தை நடத்தி வரும் மளிகை கடையை கவனித்து வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கடையை மூடிவிட்டு சென்ற போது நான்கு நபர்கள் இவரை கடத்திச் சென்று பொழிச்சலூரில் பாழடைந்த கட்டடத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் யோகேஷ்வரன் படுகாயமடைந்தார்.

கடத்திய நபர்கள் மது போதையில் நன்கு தூங்கிய நிலையில் யோகேஷ்வரன் அங்கிருந்து தப்பி வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், கடத்திச் சென்ற அனகாபுத்தூரை சேர்ந்த டைசன்(26), பொழிச்சலூரை பிரகாஷ்(30), ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

கைதான இருவரிடம் விசாரித்ததில் யோகேஷ்வரன் அனகாபுத்தூரில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அதனால் கடத்திச் சென்று அடித்ததாக கூறினார். ஆனால் யோகேஷ்வரன் கூறுகையில், மாமூல் கேட்டதாகவும் அதை தர மறுத்ததால் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 20 July 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  2. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  3. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  5. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  9. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  10. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா