/* */

சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்திய 2 பேர் கைது

சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த பயணிகள் 2 பேரை சுங்கத்துறை அகதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்திய 2 பேர் கைது
X

சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம்.

இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி,கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றாா்.

அவரை சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது தங்க பசை உடைய ஒரு பொட்டலத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதில் ரூ.11.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான 266 கிராம் தங்கப்பசை இருந்தது தெரிய வந்தது.

இதைப்போல் துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணியை சோதனையிட்டதில் ரூ.18.88 லட்சம் மதிப்புடைய 428 கிராம் தங்கப்பசை,தங்க செயின் மற்றும் ரூ.4.78 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்தனா்.அதோடு பயணியையும் சுங்கத்துறையினா் கைது செய்தனா்.

சென்னை சா்வதேச விமானநிலையத்தில் இலங்கை,துபாயிலிருந்து அடுத்தடுத்து வந்த 2 விமானங்களில் வந்த 2 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து,அவா்களிடமிருந்து ரூ.35.39 லட்சம் மதிப்புடைய 694 கிராம் தங்கம்,மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனா்.

Updated On: 20 Dec 2021 5:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!