/* */

தொழிலாளர்களுக்கு இனிப்பு வாங்கியதில் எந்தமுறைகேடும் இல்லை:போக்குவரத்து அமைச்சர்

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 262 க்கு இனிப்புகள் வாங்கப்பட்டன தற்போது அரசு நிறுவனமான ஆவினில் ரூ.230 க்கு வாங்கப்பட்டது

HIGHLIGHTS

தொழிலாளர்களுக்கு இனிப்பு வாங்கியதில்  எந்தமுறைகேடும் இல்லை:போக்குவரத்து அமைச்சர்
X

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் புதிய பேருந்துகளை தொடக்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன். 



செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின்போது இயக்கப்பட்ட பேருந்துகள் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் 17 பழைய மற்றும் புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கத்தை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவதில் எந்த வித தவறும் நடைபெறவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 262 ரூபாய்க்கு இனிப்புகள் வாங்கப்பட்டது. ஆனால் இந்த முறை 230 ரூபாய்க்கு, அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே இதில் எந்த முறைகேடும் இல்லை. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஆறு இடங்களில் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Updated On: 26 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...