/* */

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: நீதி கேட்டு பள்ளி முற்றுகை

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை சம்பவத்தில் உறவினர்கள் நீதி கேட்டு பள்ளி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: நீதி கேட்டு பள்ளி முற்றுகை
X

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நீதி கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் லதா இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் ஹரிணி(17), 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளி பள்ளியில் 11ம்வகுப்பு படித்து வரும் இவர், நேற்று முன் தினம் தேர்வு எழுதும் போது பார்த்து எழுதியதால் குழந்தை தெரசா என்ற உடற்கல்வி ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உளைசலுக்கு ஆளான மாணவி நேற்று வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளி ஆசிரியரை கைது செய்யக்கோரியும், மாணவி இறப்பிற்கு நீதி கேட்டும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 23 Sep 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  2. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  4. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  5. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  6. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  9. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  10. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்