/* */

பல்லாவரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

பல்லாவரத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பல்லாவரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
X

ரேஷன் அரிசி கடத்தியதாக, கைதானவர்கள். 

சென்னை பல்லாவரம், பழைய டிரங்க சாலையில், தலைமை காவலர் மதியழகன் என்பவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற சரக்கு வாகனத்தில் இருந்து, சாலையில் அரிசி கொட்டிக் கொண்டே சென்றது. போலீசார், அந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்து, சோதனையிட்டதில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.
விசாரணையில் ஆலந்தூர் ஆசர்கானாவில் உள்ள ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் குரோம்பேட்டையை சேர்ந்த அருண்குமார்(37), என்பவரும், ராஜலிங்கம்(31), என்பவரும் சேர்ந்து அரிசி கடத்தியது தெரியவந்தது. இருவரையும் பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து சென்று சரக்கு வாகனம் மற்றும் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தாம்பரம் முடிச்சூரில் உள்ள தெற்கு மண்டல் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 4 Dec 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?