/* */

பம்மல்: 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது!

பல்லாவரம் அருகே பம்மலில் 14 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பம்மல்: 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது!
X

போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த பம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் ரஹிம் (வயது 24) . இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகியுள்ளார்.

இதனால் 14 வயது சிறுமி 2 மாதம் கர்ப்பம் ஆனதை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கரு கலைப்பதற்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு திருமணமாகாமல் 14 வயது சிறுமி கரு கலைப்பதற்காக அழைத்து வந்ததால் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் நேரில் சென்ற அதிகாரிகள் 14 வயது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பம்மல் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த ரகிம் என்பவரை காதலித்தது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தாம்பரம் மகளிர் போலீசார் ரஹிம்மை கைது செய்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Jun 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!