/* */

வியாபாரியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: விக்ரம ராஜா பேட்டி

வியாபாரியை படுகொலை செய்த குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா தெரிவித்தார்.

HIGHLIGHTS

வியாபாரியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்:  விக்ரம ராஜா பேட்டி
X

குரோம்பேட்டையில் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் குடும்பத்தினரை வணிக சங்க பேரமைப்பு தலைவர் ப விக்ரம ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை சேர்ந்த அரிசி வியாபாரி ஆனந்தராஜ். நேற்று மாலை தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வழிமறித்த இளைஞர் சரமாரிய ஓடஒட விரட்டி படுகொலை செய்தனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் சதீஷை கைது செய்து விசாரணை நடித்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்டாரின் குடும்பத்தினரை வணிக சங்க பேரமைப்பு தலைவர் ப விக்ரம ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டுமெனவும்,

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்,

அதுமட்டுமின்றி குரோம்பேட்டை பகுதியில் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கும் இளைஞர்கள் தான் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்,

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Updated On: 19 July 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்