/* */

அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

அனகாபுத்தூரில், ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
X

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், ஆற்றங்கரை ஓரம் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக, சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சங்கர் நகர் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் கருப்புசாமி, ராமசந்திரன், காவலர்கள் செர்லின், கண்ணன் ஆகியோர், நிகழ்விடத்திற்கு சென்று கண்காணித்த போது, கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.

ஆட்டோவில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த, மாங்காட்டை சேர்ந்த சிவசங்கர் (25), கோவூரை சேர்ந்த இந்துநாதன் (35), மவுலிவாக்கத்தை சேர்ந்த முரளி (29), கெருகம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) பாட்டில் மணி (27), ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். நான்கு பேர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 19 Dec 2021 11:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா