/* */

சூறைக்காற்றுடன் பலத்த மழை; சென்னை ஏர்ப்போர்ட்டில் விமானங்கள் தவிப்பு

சென்னை புறநகா் பகுதியில் இன்று அதிகாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

HIGHLIGHTS

சூறைக்காற்றுடன் பலத்த மழை; சென்னை ஏர்ப்போர்ட்டில் விமானங்கள் தவிப்பு
X

சென்னை புறநகா் பகுதியில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து ஏா்ஏசியா விமானம் 61 பயணிகளுடன் நேற்று இரவு 10.45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது. அப்போது சூறைக்காற்று மழை அதிகமாக இருந்ததால்,விமானம் தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்தது. இதையடுத்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினா். அதன்பின்பு அந்த விமானம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு பெங்களூரிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்தது.

அதைப்போல் சென்னையிலிருந்து டில்லி,பெங்களூா் செல்ல வேண்டிய 2 பயணிகள் விமானங்கள், ஹைதராபாத், பெங்களூா், ஹாங்காங் செல்ல வேண்டிய 3 சரக்கு விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதனால், பயணிகள் கடும் தவிப்புக்கு ஆளாகினர். விமானங்கள் இயக்கத்திற்குப்பின் புறப்பட்டு சென்றனர்.

Updated On: 20 July 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?