/* */

பல்லாவரத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

பல்லாவரத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பல்லாவரத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
X
பல்லாவரத்தில் தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் இனாயத் அருகில் தேசிய தவ்ஹித் கூட்டமைப்பு பல்லாவரம் தொகுதி தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி வருவதை கண்டித்தும், போதை பழக்க வழக்கத்தை தடுக்கும் விதமாகவும் விழிப்புணர்வு மனித சங்கலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா தவ்ஹிதி தலைமை தாங்கினார்

பல்லாவரம் தொகுதி செயலாளர் முகம்மது சபியுல்லா முன்னிலை வகித்தார்.சிறப்பு அமைப்பாளராக ஜெப்ரி மற்றும் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நூற்றுகணக்கான தவ்கித் ஜாமத்தினர் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியப்படி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்சியாக ஒரு மாதம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் எனவும் தேசிய தவ்கித் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இதில் சபீக் அஹ்மது, அபிபுல்லா, அன்வர், ஹாஜா, நூர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 17 Oct 2021 6:30 AM GMT

Related News