/* */

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக ஓடுவதால் அவதி!

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரில் கலந்து சாலையில் ஆராக ஓடியதால் பொதுமக்கள் அவதி

HIGHLIGHTS

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக ஓடுவதால் அவதி!
X

குடிநீர் குழாய் உடைப்பால் திருநீர்மலை நெடுஞ்சாலை ஆறுபோல் காட்சி அளிப்பதை காணலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் பல்லாவரத்திலிருந்து திருநீர்மலை செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் ஆறுபோல் ஓடுகிறது. இந்த குடிநீர், அருகில் உள்ள கழிவுநீர் காலவாயில் கலந்து சாலைகளை முழுவதுமாக ஆக்கிரமித்து காணப்படுகிறது.

பொதுமக்கள் சாலை கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையில் அதிகமாக தேங்கும் நீரால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது.

பாதசாரிகள் சாலையை கடக்கும்போது கனரக வாகனங்கள் செல்வதால் சாலையில் உள்ள கழிவு நீர் பாதசாரிகள் மேல்படும் சூழல் உருவாகியுள்ளது. இருசக்கர வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனடியாக சீர்செய்து சாலைகளில் தேங்கிய நீரை அப்புறபடுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 Jun 2021 9:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?