/* */

திருநீர்மலை நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தகோரி ஆர்ப்பாட்டம்

திருநீர்மலையில் நீர்நிலைகளில் குப்பை ட்டுவதை தடுத்து நிறுத்தகோரி அம்பேத்கர் எழுச்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருநீர்மலை நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தகோரி ஆர்ப்பாட்டம்
X

தாம்பரம் மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகே டாக்டர் அம்பேத்கர் எழுச்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த திருநீர்மலை தாம்பரம் மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகே டாக்டர் அம்பேத்கர் எழுச்சி இயக்கம் சார்பில் திருநீர்மலை நீர்நிலைகளில்குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தி குடிநீர் ஆதாரமாக மாற்றகோரி நிறுவனர் கார்த்திக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் அம்பேத்கர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருநீர்மலை என்ற பெயர் நீர்நிலைகள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும், ஆனால் தற்போது நீர்நிலை உள்ள ஏரி,குளம் போன்றவற்றில் குப்பை கழிவுகள் கொட்டபட்டு அசுத்தம் அடைவதால் பொதுமக்கள் பயன்பாடற்று உள்ளது.

நாகல்கேனி தோல்தொழிற்ச்சாலை கழிவுகள் கலக்கபடுவதால் நிலத்தடிநீர் மாசடைந்து காணப்படுகிறது. காமராஜபுரம் கல்குவாரியில் உள்ள நீர் குடிநீர் ஆதாரமாக திருநீர்மலை மக்கள் பயன்படுத்தபட்டு வருவதாகவும், இதனை மெட்ரோ பணியின் போது எடுக்கபடும் மணல் நீர்நிலை குவாரிகளை மூடுவதற்கு தடைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதற்கு அரசு செவிசாய்க்க வில்லையெனில் திருநீர்மலை மக்களை ஓன்று திரட்டி தொடர் உண்ணாவிரத போரட்டம் நடத்த போவதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் டாகடர் அம்பேத்கர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் ஏராளமனோர் கண்டன பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 27 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  4. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  5. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  6. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  7. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  8. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  9. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  10. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்