/* */

பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள்

பல்லாவரத்தில் பக்ரீத் பெருநாள் விழாவை முன்னிட்டு ஆடுகளை வாங்க இஸ்லாமியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள்
X

விற்பனைக்காக வந்துள்ள செம்மறி ஆடுகள்.

செங்கல்பட்டு மாவட்டம், கண்டோன்மெண்ட் பல்லாவரத்தில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. யாமொய்தீன் என்பவர் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கிடாய் ஆடுகளை தரம் பிரித்து விற்று வருகிறார். ஆடுகளை இஸ்லாமிய சகோதரர்கள் குர்பானிக்காக வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து தொழிலதிபர் யாமொய்தீன் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இந்த ஆண்டு வியாபரம் நன்றாக உள்ளது ஆடுகளின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் விற்க்கபடுவதாகவும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப இஸ்லாமியர்கள் வாங்கி செல்கின்றனர்.

இங்கு செம்மறி ஆடு, வெள்ளாடு என அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு குர்பானிக்காக வாங்கி செல்வதாகவும். இவை ஆந்திரா, கர்நாடக, ராஜஸ்தான் மற்றும் உள்ளூர் பகுதிகளான சமயபுரம், திருச்சி கள்ளகுறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் இருந்தும் ஆடுகள் வந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் , ஒரு வருடத்திற்கு மேலான ஆடுகளையே விற்பனை செய்து வருகிறோம். இத்தொழிலை 10 ஆண்டுகாலமாக செய்து வருகிறோம் எனவும் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆடுகள் குர்பானிக்காக விற்படுகிறது. இதனை உள்ளூர் மற்றும் சென்னை நகர பகுதிகளில் இருந்தும் வாங்கி செல்கின்றனர். ஆடுகளின் எடை 30 கிலோ முதல் 100 கிலோ எடை வரை இருக்கின்றன. அனைத்தும் பழுது இல்லாமல் தரமான ஆடுகள் எனவும் இதனை நாங்களே முன்னின்று குர்பானிக்காக சரிபார்த்து தருவதாக யாமொய்தீன் கூறினார்.

Updated On: 20 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  2. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  3. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  5. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  6. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  7. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  8. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  9. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு