/* */

பல்லாவரத்தில் ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம்: மாநகராட்சிக்கு கோரிக்கை

பல்லாவரத்தில் ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பல்லாவரத்தில் ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம்: மாநகராட்சிக்கு கோரிக்கை
X

விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ராட்சத விளம்பர பேனர்.

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை, பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல் ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமாக விளம்பர பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.

காற்றில் பறந்து தொங்கிக் கொண்டிருக்கும் கிழிந்த பேனர் ரேடியல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மேல் விழுந்தால் பெரும் விபத்து எற்படும் அபாயம் உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இதே ரேடியல் சாலையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனரால் உயிரிழந்தந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜி.எஸ்.டி.சாலையிலும் இராட்சத பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற தடை ஆணை இருக்கும் பட்சத்தில் இராட்சத விளம்பர பேனர்களை தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 27 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  3. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  9. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
  10. திருவண்ணாமலை
    10 முறை மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார்