/* */

தமிழ்நாட்டிற்கு 17,40,000 டோஸ் தடுப்பூசிகள், விமானத்தில் சென்னைக்கு வந்தன

தமிழ்நாட்டிற்கு 17 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னையை வந்தடைந்தது.

HIGHLIGHTS

தமிழ்நாட்டிற்கு  17,40,000 டோஸ் தடுப்பூசிகள்,  விமானத்தில் சென்னைக்கு வந்தன
X

சென்னைக்கு விமானத்தில் வந்த தடுப்பூசிகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மே மாதம் உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்தியது.தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்,கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால்,கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.இரண்டாம் அலை பாதிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் மருத்துவ வல்லுனா்கள் அடுத்து 3 ஆம் அலை வெகுவிரைவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளது.அதிலிருந்து தப்பிக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசிகள் போடும்படி அறிவுறுத்தியுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா்.

நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு குறைந்தளவு தடுப்பூசிகளையே அனுப்பி வருகிறது.இதனால் தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சா், பிரமருக்கு,தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என்று அவசர கடிதம் எழுதினாா்.

அதோடு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா்,நல்வாழ்வு துறை செயலாளா் ஆகியோரை டில்லிக்கு அனுப்பி,மத்திய சுகாதார அமைச்சா்,மத்திய சுகாதார செயலாளரை சந்தித்து கூடுதல் தடுப்பூசிகளை கேட்க செய்தாா்.

அதன்பின்பு தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு சீரான இடைவெளியில் தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு இன்று,மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 17,40,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது.

அந்த 17,40,000 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 145 பாா்சல்களை ஒரே நேரத்தில் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரமுடியாததால், ஸ்பைஜெட் சரக்கு விமானத்தில் அந்த 17,40,000 தடுப்பூசிகள் அடங்கிய 145 பாா்சல்களும் ஏற்றப்பட்டன.அதன்பின்பு அந்த சரக்கு விமானம் புனேவிலிருந்து சென்னைக்கு இன்று மாலை வந்து சோ்ந்தது.

தமிழ்நாட்டிற்கு ஒரே விமானத்தில் 17,40,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.மத்திய சுகாதாரத்துறை இந்த மாதம் தமிழ்நாட்டிற்கு 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்திருந்தது.

ஆனால் இந்த மாதம் முடிவடைய இன்னும் சில நாட்கள் தான் உள்ளன.மத்திய அரசு அறிவித்தப்படி, தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகள் வரவில்லை.இதையடுத்து தற்போது ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான தடுப்பூசிகளை அனுப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த தடுப்பூசிகள் சென்னை பெரிய மேட்டில் உள்ள மத்திய மருந்து பொருட்கள் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்பட்டு,அங்கிருந்து சென்னை தேனாம்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் கூறப்படுகிறது.

Updated On: 27 July 2021 1:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்