/* */

12 ஆண்டுகளாக மக்கள் அவதி: பாலாறு தரைப்பாலத்தை சீரமைப்பர்களா? -வேதனையுடன் 15 கிராம மக்கள்..!

செங்கல்பட்டு: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாலாறு தரைப்பாலத்தை சீரமைக்க 15 கிராம மக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

12 ஆண்டுகளாக மக்கள் அவதி: பாலாறு தரைப்பாலத்தை சீரமைப்பர்களா? -வேதனையுடன் 15 கிராம மக்கள்..!
X

பழுதடைந்து உடைந்த நிலையில் பாலாறு தரைப்பாலம்.  

கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள உதயம்பாக்கம்-படாளம் இடையே உள்ள பாலாற்றின் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என 15 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு, உதயம்பாக்கம், படாளம், பொன்விளைந்த களத்தூர், புலிப்பாரக்கோயில், புதூர், உள்ளிட்ட 15 கிராம ஊராட்சிகளிலும் சுமார் 3,லட்சம் பேர் வசித்து வருகின்றனர். உதயம்பாக்கம்- படாளம் ஆகிய இரு ஊராட்சிகளையும் இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. படாளம், புலிப்பாரக்கோயில் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தினமும் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு செங்கல்பட்டு செல்லும் மக்கள் பாலாறு தரைபாலத்தை கடந்து உதயம்பாக்கம் வழியாக சென்று வந்தூள்ளனர். ஆனால் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பாலாற்றில் மணல் திருடர்கள் பாலத்தின் கரையோரம் உள்ள மணலை திருடிச்சென்றதன் காரணமாக பாலம் முற்றிலுமாக இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 15 கிராம மக்கள் அருகில் உள்ள செங்கல்பட்டுக்கு செல்லவேண்டும் என்றால் கூட சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றனர். இதனால் கிராம மக்கள் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்ததாகவும், ஆனால் இது நாள்வரையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் வேதனையுடன் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Updated On: 24 Jun 2021 1:34 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்