/* */

கல்பாக்கம் அருகே இடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்

கல்பாக்கம் அருகே இடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கல்பாக்கம் அருகே இடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்
X

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சூராடிமங்கலம் பகுதியில், அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான இடுகாட்டு பாதையை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, அப்பகுதியில் வசிக்கும் நாகராஜன் என்பவர் மனைவி மாரியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அவ்வழியாக செல்லக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் சிவசங்கர் இந்தப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்றும், ஆக்கிரமிப்பை அகற்றுவதாகவும் உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 1 Dec 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...