/* */

செங்கபட்டில் காள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது; ரூ.4 லட்சம் பறிமுதல்

செங்கபட்டில் டாஸ்மாக் மதுபான கடையில் ரூ.500 காள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற தந்தை, மகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செங்கபட்டில் காள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது; ரூ.4 லட்சம் பறிமுதல்
X

பைல் படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் தொடர்ந்து சிலர் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் மற்றும் முக்கிய கடைகள், வனிக வளாகங்களில் போலீசார் சந்தேகப்படும்படி ஐநூறு ரூபாய் நோட்டுகளை யாராவது கொண்டுவந்தால் தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் இருவர் கள்ளநோட்டுக்களை கொடுத்து மதுபானம் வாங்க வந்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற போலீசார் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த தந்தை ராஜி, வயது 56, மகன் கன்னியப்பன் வயது 34 என்பது தெரியவந்தது. இருவரும் செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கம் பகுதியில் உள்ள விஜயா நகரில் ஒரு தனி வீடு எடுத்து கள்ளநோட்டுக்களை அங்கு வைத்து புழக்கத்தில் விட்டுவந்ததாகவும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 800 ஐநூரு ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 30 Aug 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...