/* */

கீரப்பாக்கம் ஊராட்சியில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வு

கீரப்பாக்கம் ஊராட்சியில் இருளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க டி.ஆர்.ஓ வீடு வீடாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கீரப்பாக்கம் ஊராட்சியில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க  ஆய்வு
X

இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வு நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள இருளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று சர்வே செய்து உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 43 இருளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக கடந்த மாதம் சர்வே செய்யப்பட்டது. இதில் அரசு புறம்போக்கு நிலமாக இருந்ததை தற்போது நத்தம் புறம்போக்கு நிலமாக வகைப்பாடு மாற்றப்பட்டு அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் உள்ளன.

இதனையடுத்து அப்பகுதியில் வசித்து வரும் இளைஞர்களுக்கு இலவசை வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மானுவேல்ராஜ், வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம், துணை வட்டாட்சியர் ஏழுமலை ஆகியோர் அப்பகுதிக்கு சென்று திடீர் என்று ஆய்வு செய்தனர்.

இதில் வீடு வீடாக சென்ற அதிகாரிகள் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் உள்ள ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின்சார அடையாள அட்டை, வீட்டு வரி, இருளர் ஜாதி சான்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரி பார்த்தனர் அப்போது வண்டலூர் வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர் பொன்னுதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்

Updated On: 17 Feb 2022 11:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்