/* */

மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் அன்னதான திட்டம் துவக்கம்

மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் தினமும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.

HIGHLIGHTS

மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் அன்னதான திட்டம் துவக்கம்
X

ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில்  தினமும் அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் அனைத்து ஜைனர்களால் வணங்கப்படும் 24 தீர்த்தங்கரர்களில் 21-ஆவது தீர்த்தங்கரராகிய 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் வழிபாட்டிற்கு வருகை புரிவோர் மற்றும் ஏழைகளுக்கு அனுதினமும் அன்னதானம் வழங்கும் திட்டமானது இன்று காலை துவக்கப்பட்டது.

108 ஸ்ரீ விஷ்வேஷ் சாகர் முனி மகராஜின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில், சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் நகர மன்றத் தலைவர் M.G.K.கோபிகண்ணன், முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர், ஜெ.சண்முகம் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், மற்றும் பண்டிட் ஜெயபால் ஜெயின் சாஸ்திரி திண்டிவனம் ஜீவேஜேந்திரதாசன் உட்பட சமணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று துவக்கப்பட்ட அன்னதான கூடத்தை ஜெ.சண்முகம் திறந்து வைத்தார். ஆலயத்தின் அறங்காவலர் ராஜசேகர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து..

Updated On: 21 Feb 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?