/* */

அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்கும்

எஸ்ஆர்எம் பல்கலையில் நடைபெற்ற ஆராய்ச்சியாளர் தினத்தையொட்டி 146 ஆராய்ச்சியாளர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்கும்
X

இந்தோ அமெரிக்கா அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் முனைவர் நந்தினி கண்ணன் கலந்துகொண்டுஆராய்ச்சியாளர்களுக்கு பதக்கம்சான்றிதழ்கள் வழங்கினார்

அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்குவதாக இந்தோ- அமெரிக்கா அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் நந்தினி கண்ணன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் தினம் 2022 எஸ்ஆர்எம் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது

நிகழ்வுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக இந்தோ அமெரிக்கா அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குனர் முனைவர் நந்தினி கண்ணன் கலந்துகொண்டு146 ஆராய்ச்சியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். மேலும் எஸ்ஆர்எம் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையதிற்கு சிறப்பு மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு அமைக்க அரசின் நிதி பெற காரணமாக விளங்கிய டாக்டர் சத்யஜித் மகோபத்ராவை பாராட்டி விருது வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில் :அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாலமாக விளங்குகிறது. சர்வதேச அளவிலான ஆராய்ச்சி பணிகள் அதிலும் கூட்டு ஆராய்ச்சி பணிகள் புதுமை படைப்புகளுக்கு வழிவகுக்கும், எனவே மாணவர்களை சர்வதேச அளவிலான கூட்டு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். .நாட்டின் தேசிய கல்வி கொள்கை மூலமாக சர்வதேச அளவில் மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்கவும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும் வழி வகுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ. ரவிக்குமார், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எஸ். பொன்னுசுவாமி, தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் குணசேகரன் மற்றும் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள், டீன்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Updated On: 1 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  3. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  5. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  6. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  7. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  8. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  10. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!