/* */

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

ரெட்டிப்பாளையம் பஞ்., தலைவரால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து
X

ரெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் உள்ள பால்வாடி.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் அருகே உள்ளது ரெட்டிப்பாளையம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. இதே வளாகத்தில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி, பால்வாடி பள்ளியும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பால்வாடி பள்ளி அருகே குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியை பஞ்., தலைவர் துவங்கினார். அப்போது சுமார் 10 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணி முழுமை பெறாததால் அந்த பள்ளத்தில் 4 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் குழந்தைகளின் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்., தலைவரிடம் தெரிவித்தும் அந்த பள்ளத்தை இதுவரை சீரமைக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் குழந்தைகளின் உயிரை காக்க விரைந்து பள்ளிக்கு ஆய்வு நடத்தி பள்ளத்தை மூடவும், பஞ்., தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்