Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டில் கன மழை: சாலையில் ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டில் பெய்த கன மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
HIGHLIGHTS
வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று மாலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கன மழை கொட்டித்தீர்த்தது. செங்கல்பட்டு நகர பகுதியில் இரவு வெளுத்து வாங்கிய கன மழை காரணமாக அரசு தலைமை மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் உள்பட ஜி.எஸ்.டி சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக ஜி.எஸ்.டி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் மழையின் போது சாலைகாளில் தேங்கும் வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.