/* */

செங்கல்பட்டில் கன மழை: சாலையில் ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டில் பெய்த கன மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் கன மழை:  சாலையில் ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
X

செங்கல்பட்டில் பெய்த கனமழையால் சாலையில் ஓடும் நீர்.

வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இதனை தொடர்ந்து, இன்று மாலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கன மழை கொட்டித்தீர்த்தது. செங்கல்பட்டு நகர பகுதியில் இரவு வெளுத்து வாங்கிய கன மழை காரணமாக அரசு தலைமை மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் உள்பட ஜி.எஸ்.டி சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக ஜி.எஸ்.டி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் மழையின் போது சாலைகாளில் தேங்கும் வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!