/* */

செங்கல்பட்டு பாலாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்மழையால் செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

HIGHLIGHTS

செங்கல்பட்டு பாலாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளநீர்

வேலூர் மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து திறந்துவிடும் உபரிநீரானது பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்தில் மழை பெய்வதாலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை தாண்டி சீறிப்பாய்ந்து தண்ணீர் ஓடுகிறது. பாலாற்றில் செல்லும் தண்ணீரை பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

பாலாற்றில் எப்போது வேண்டுமானாலும் திடீரென வெள்ளம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வில்லியம்பாக்கம், தேவனூர் செறிவூட்டு அணை பகுதியில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் வீட்டை சூழ்ந்தவாறு வெள்ளம் செல்கிறது.

இதேபோன்று பல இடங்களில் வீடுகள் அருகே வரை வெள்ளம் செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கால்நடைகளை மேய்க்கவோ, துணி துவைக்கவோ, அல்லது குளிக்கவோ ஆற்றில் இறங்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 21 Oct 2021 3:30 AM GMT

Related News