/* */

மதுராந்தகம் அருகே கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஒருவர் உயிரிழப்பு

HIGHLIGHTS

மதுராந்தகம் அருகே கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
X

மதுராந்தகம் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. 

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருவக்கரை பத்திரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற கார் அத்திமனம் என்ற பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்பொழுது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி இடது புறமாக உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமிதாப் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் அவருடன் சென்ற இருவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து படாளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 Jun 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  2. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  4. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  9. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!