Begin typing your search above and press return to search.
மதுராந்தகம் அருகே கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஒருவர் உயிரிழப்பு
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருவக்கரை பத்திரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற கார் அத்திமனம் என்ற பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்பொழுது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி இடது புறமாக உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமிதாப் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் அவருடன் சென்ற இருவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து படாளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.