/* */

மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

இந்து அமைப்புகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.கவினர் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X

செங்தல்பட்டு மாவட்ட எஸ்பி-யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 

செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.கவினர் மற்றும் இந்து அமைப்புகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கூறி செங்கல்பட்டு மாவட்டத்தலைவர் பலராமன் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பகுதியில் சுதந்திர தினத்தன்று காவல்துறை அனுமதியில்லாமல் பா.ஜ.கவினர் சாலையோரத்தில் தேசிய கொடியினை ஏற்றியதாக கூறி மாவட்ட காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்தும், பா.ஜ.கவினர் மீதும் இந்து அமைப்புகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்துவருவதாகவும் கூறி, இன்று 500க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், இந்து முன்னனி மாநில பொதுச்செயலாளர் பரமேஷ்வரன், மாநில செயலாளர் ராமன், பாஜக மாநில சிறுபான்மை அணி செயலாளர் படாளம் ஜெபராஜ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

Updated On: 31 Aug 2021 1:00 PM GMT

Related News