Begin typing your search above and press return to search.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை
செங்கல்பட்டு அருகே தைப்பூச விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளி பகுதியில் உள்ள மிக பழைமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் இன்று தைப்பூச விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பால்குட ஊர்வலம், காவடி என ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.இந்நிலையில் விழா முடிய உள்ள நிலையில் மதியம் மலையடிவாரத்தில் அன்னதானம் போடப்பட்டது.
அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பெண்களிடமிருந்து சுமார் 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகைகளை பறிகொடுத்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.