Begin typing your search above and press return to search.
அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பதி, திருச்சிராப்பள்ளி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.