/* */

பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகள்: திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் இன்று முதல் ஆரம்பம்

பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக, சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சிகள்

HIGHLIGHTS

பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகள்:  திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் இன்று முதல் ஆரம்பம்
X

பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக, சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சிகள் - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.

பாட்டுடைத் தலைவன் மகாகவி பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக, அவரின் அருமை பெருமைகளை அகிலமே வியந்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆண்டுகள் 100 ஆனாலும், இன்னும் 1000 ஆண்டுகள் கடந்தாலும், பெரும்புலவன் பாரதியின் கவிதைகளில், பாடல்களில் நாட்டுப்பற்று, ஒற்றுமையுணர்வு இவைகளையெல்லாம் தாண்டி, இன்றைய தமிழ்ச் சமுதாயத்துக்கு அவசியமான சமூக, பொருளாதார உரிமைகள் குறித்தவை இன்றல்ல; என்றென்றும் பெரும்புலவன் பாரதி அவசியம் தேவை" என்று பாரதி நினைவு விழாவிலே குறிப்பிட்டார்.

மேலும், அவரின் அருமை பெருமைகளைப் போற்றிடும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் பெரும்புலவன் பாரதியாரின் நினைவு நூற்றாண்டினை முன்னிட்டு, அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையின் சார்பில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்துகின்ற வகையில், சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் வரும் டிசம்பர்த் திங்கள் 4-ஆம் தேதி தொடங்கி 44 வாரங்களுக்கு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, பள்ளிக் கல்வித்துறை, வானவில் பண்பாட்டு மையம் மற்றும் பாரதி புகழ்பாடும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று மாலை 6 மணி தொடங்கி நடைபெறவுள்ளது.

பாரதியார் நினைவு இல்லத்தில், முதல் நிகழ்ச்சியினை இன்று (04.12.2021) மாலை 5 மணிக்கு தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் வழங்கும் பாரதியின் புகழ்பாடும் நாதஸ்வர இசை நிகழ்ச்சியினை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார். மகேசன் காசிராஜன், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, முனைவர் வீ.ப.ஜெயசீலன், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ண குமார் ஆகியார் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

Updated On: 4 Dec 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!