/* */

தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு உடல் மீட்பு- கொலையா?

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறை தண்ணீர் தொட்டியில், பிறந்த பெண் சிசுவின் கண்டெடுக்கப்பட்டது; கொலை செய்யப்பட்டுள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு உடல் மீட்பு- கொலையா?
X

தஞ்சாவூரில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்கு துப்புரவு தொழிலாளிகள் இன்று சென்றுள்ளனர். அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடியுடன் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதனை பார்த்த துப்புரவு தொழிலாளர்கள் பதறினர்; இதுபற்றி, கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததனர். உடனடியாக கல்லூரி முதல்வர் தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, நேற்றில் இருந்து கழிவறை பகுதிக்குள் யார் யார் சென்றார்கள் என்று, அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேஇன்று காலை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்ற ஒரு பெண், அரை மணி நேரம் கழித்து வெளியே வந்ததும், அந்த பெண் யார் அந்தப் பெண் குழந்தையை பெற்றெடுத்து அங்கு விட்டு சென்றாரா அல்லது குழந்தையை கொன்று தொட்டியில் வைத்து சென்றாரா என பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 4 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்