/* */

நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்  கைது
X

கைது செய்யப்பட்ட ராஜேஷ்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். . இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ராஜேசை கண்டித்துள்ளனர்.இருப்பினும் ராஜேஷ் கேட்காமல் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம். செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ் மற்றும் 17 வயது மாணவி இருவரையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Sep 2022 7:57 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?