/* */

ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
X

கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்.

அரியலூர் மாவட்டம், சூரியமணல் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோயில். இக்கோயிலின் கேட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் பாறையால் நெம்பி உள்ளே புகுந்த கோவிலில் இருந்த நான்கரை அடி உயரமுள்ள உண்டியலை அருகே உள்ள செட்டிகுழிபள்ளம் இளமங்கலம் ராமகிருஷ்ணன் என்பவரது முந்திரி வயலில் வைத்து உடைத்தனர்.

அதிலிருந்த காணிக்கை பணம் முழுவதையும் கொள்ளையடித்துவிட்டு முந்திரி வயலிலேயே உண்டியலை வீசி சென்றுள்ளனர். மேலும் அங்கே அமர்ந்து மது குடித்துள்ளனர்.

சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவிலில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் செட்டிகுழிப்பள்ளம் அருகே இளமங்கலம் முந்திரி வயலில் கொள்ளையர்கள் உடைக்கப்பட்ட உண்டியலை வீசிசென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 Jun 2022 3:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது