/* */

ஊருக்குள் புகுந்த தண்ணீர்: தெருவில் நாற்றுநட்டு மக்கள் போராட்டம்

அரியலூர் அருகே, ஏரி நிரம்பி, தண்ணீர் ததும்பி ஊருக்குள் புகுந்தது; இதற்கு தீர்வு காணக்கோரி, கிராம மக்கள் தெருவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஊருக்குள் புகுந்த தண்ணீர்: தெருவில் நாற்றுநட்டு மக்கள் போராட்டம்
X

அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில்,  ஏரி ததும்பி தெருவில் வரும் தண்ணீரை கட்டுப்படுத்தக்கோரி,  தெருவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில், அம்மையன் தெரு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி குடியிருப்பு பகுதிகளையொட்டி, சின்ன ஏரி, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால், சின்ன ஏரியானது நிரம்பி வழிகிறது. அதிலிருந்து வெளியேறும் உபரி நீரானது போதிய வடிகால் வசதியின்றி, தெருக்களில் புகுந்து குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்தது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, பொதுமக்களே களத்தில் இறங்கி மழைநீரை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது திடீரென அங்கிருந்த பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் சாலைவசதி இல்லை, மழை நீர் தங்கு தடையின்றி செல்வதற்கு போதிய வடிகால்வசதி இல்லை. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்வதற்கு போதிய மதகுகள் இல்லை. இதன் காரணமாக, மழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலையை சந்தித்து வருகிறோம் என்றனர். தகவல் அறிந்து வந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், உடனடியாக ஜேசிபி எந்திரம் மூலம் மழைநீரை தற்காலிகமாக வெளியேற்றினர். மேலும் சாலை மற்றும் மதகு வசதி செய்து தரப்படும் என பொதுமக்களிடத்தில் தெரிவித்தனர்.

Updated On: 11 Nov 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  3. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  4. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  6. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  7. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  8. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த...
  9. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  10. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...