/* */

தா.பழூரில் வேலைவாய்ப்பு முகாம் - 45 நபருக்கு பணி ஆணை வழங்கல்

தா.பழூர் வட்டாரத்தைச் சேர்ந்த 168 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டதில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிஆணை வழங்கப்பட்டது

HIGHLIGHTS

தா.பழூரில் வேலைவாய்ப்பு முகாம் - 45 நபருக்கு பணி ஆணை வழங்கல்
X

மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சிவகுமார் வேலைவாய்ப்பு ஆணை வழங்கினார்.



அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியோர் இணைந்து வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்பு கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமிற்கு, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன் முன்னிலை வகித்தனர். முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சிவகுமார் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இம்முகாமில் சென்னை, நாகை, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்று தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்தனர். இம்முகாமில் தா.பழூர் வட்டாரத்தைச் சேர்ந்த 168 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊரக வாழ்வாதார திட்ட வட்டார மேலாளர் ராமலிங்கம் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், சுபாஷினி, மீனா, உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Updated On: 30 Dec 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்