Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவ,மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் பட்டங்கள் வழங்கினார்.
HIGHLIGHTS
ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவனத் தலைவர் சிலம்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
இவ்விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைசெல்வன், எம்.ஆர்.சி கல்வி நிருவனங்களின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன்,தி.மு.க சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.