/* */

சிறுமியை கடத்திச் சென்றவரை போக்ஸோவில் கைது செய்த அனைத்து மகளிர் போலீசார்

புகாரின் பேரில் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

சிறுமியை கடத்திச் சென்றவரை  போக்ஸோவில் கைது செய்த அனைத்து மகளிர் போலீசார்
X

ஜெயங்கொண்டம் அருகே பலாகாரத்திற்காக சிறுமியை கடத்திச் சென்றவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சி பெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் தா பழூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு திருமணநிகழ்வுக்கு சென்ற மணிகண்டன் 14 வயது சிறுமியை போன் செய்து வரவழைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார். சிறுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சிறுமியிடம் விசாரணை செய்தபோது மணிகண்டன் தன்னை தவறாக நடப்பதற்கு கடத்திச் செல்ல முயற்சித்த உள்ளார் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Updated On: 3 Jun 2022 11:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...