/* */

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளை
X

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மூன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார்.

கமலக்கண்ணனும் அவரது மனைவியும் கடந்த 29ஆம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று இரவு கன்னியாகுமாரியில் இருந்து திரும்பிய கமலக்கண்ணன் வீட்டின் முன் பகுதியில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன் கதவு பூட்டும் பாறையால் நெம்பி உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 2 Aug 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!