Begin typing your search above and press return to search.
17வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஜெயங்கொண்டம் அருகே 17வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அரசகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ரகு வயது 21. இவர் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்த நிலையில், தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் துரைமுருகனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ரகுவை கைது செய்தனர். திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.